அதிரையில் 16ஆம் நாள் தொடர் போராட்டம் – தமீமுன் அன்சாரி MLA பங்கேற்பு

CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராகவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அதிரையில் ஷாஹீன் பாக் பாணியில் இன்று 16வது நாளாக தொடர் போராட்டம் அதிரை ஜாவியா ரோட்டில் நடைபெற்று வருகிறது.


இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தி வருகின்றனர்.


அந்த வகையில் இன்று 16வது நாள் தொடர் போராட்டத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச்செயலாளருமான தமீமுன் அன்சாரி MLA பங்கேற்று கண்டன எழுச்சியுரை ஆற்றினார்.


தொடர்ந்து நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என பலர் பங்கேற்று CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.


Popular posts
பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரத்தில் தனிமை முகாமில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் தொடர்பு கொண்ட நபர்கள் அரசின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்
தில் வீட்டிற்கு அனுப்பப்பட்ட 26 பேரில், டில்லி வாலிபர் உட்பட 4 பேருக்கு கொரோனா உள்ளது தெரியவந்தது
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட டில்லி வாலிபர் உட்பட 4 பேர்
கொரோனா நோயாளிகளை தவறுதலாக அனுப்பி வைத்த மருத்துவமனை
Image